sirakadikka asai 25

சிறகடிக்க ஆசை இன்று.. விஜயாவின் வன்மத்தால்.. அண்ணாமலையின் திட்டம் நிறைவேறுமா?

By

சிறகடிக்க ஆசை சீரியல் -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான கதைக்களம் எப்படி இருக்கும் என்பதை இங்கே காணலாம்.

மீனாவை மட்டமாக பேசும் ரோகிணி ;

மீனாவும் ஸ்ருதியும் கிச்சனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இப்போது சுருதி சொல்கிறார் ..மீனா உங்களுக்கு டயர்டே ஆகாதா மூணு வேலையுமே நீங்க தான்  சமைக்கிறீங்க.. அதுக்கு மீனா சொல்றாங்க ..மத்தவங்களுக்காக செய்யும்போது அலுப்பு தெரியாது சுருதி. இப்போ ரோகிணி இங்க வராங்க. நீங்க எப்படி மீனா மாசம் மாசம் பணம் கொடுப்பீங்க முத்து டிரைவர் வேலை பாக்குறாரு அப்படின்னு கிண்டலா கேக்குறாங்க.

இதுக்கு மீனா சொல்றாங்க உழைக்க முடியும்னு  நம்பிக்கை இருந்தாலே போதும் நாங்க கொடுத்துடுவோம். அதுவும் நீங்க லட்சத்துல சம்பாதிக்கிறீங்க எங்கள விட கம்மியா தானே சொல்லி இருக்கீங்க அப்படின்னு சொல்றாங்க. இதுல ரோகினிக்கும் மீனாவுக்கும் கொஞ்சம் வாக்குவாதம் வருது உடனே சுருதி அதை சமாதானப்படுத்தி விடுறாங்க.

இப்போ முத்துவும்  மாடியில் இருந்து வராரு மீனா ஒரு டீ குடு தலை வலிக்குதுன்னு சொல்றாரு. மாடியில் நடந்ததெல்லாம் மீனா கிட்ட சொல்றாங்க .இப்போ மீனாவும் கிச்சன்ல நடந்த எல்லாத்தையும் சொல்றாங்க .இப்போ அண்ணாமலைய தேடி அவங்க பிரண்டு இன்ஜினியரை கூப்பிட்டு வராங்க.. உடனே விஜயா, எல்லாரையும் கூப்பிட்டு உங்க அப்பா இன்ஜினியரை கூப்பிட்டு மாடிக்கு போறாரு வாங்க எல்லாரும் போவோம்னு அங்க போறாங்க.

மாடியில் ரூம் கட்டும் எண்ணத்தில் அண்ணாமலை ;

இன்ஜினியரு பாத்துட்டு ரூம் கட்ட 5 லட்சம்   பணம் செலவாகும் என்று சொல்கிறார் .அண்ணாமலையும் நான் ரெடி பண்ணிட்டு சொல்றேன் அப்படின்னு சொல்லி அனுப்பி வைக்கிறாரு . இப்போ விஜயா சொல்றாங்க யாருக்கு ரூம் கட்ட போறீங்க. அண்ணாமலை சொல்றாரு முத்துவும் மீனாவும் எத்தனை நாளு ஹால்லே  படுப்பாங்க அவங்களுக்கு தான் ரூம் அப்படின்னு சொல்றாரு .

உடனே விஜயா  இவங்களுக்கு  எதுக்கு அஞ்சு லட்சத்தில் ரூம் ஒரு கூர வீடு இருந்தா பத்தாதா அப்படின்னு கேக்குறாங்க. இப்ப மீனா சொல்றாங்க என் புருஷன் கூட நான் கூர  வீட்ல இருந்தாலும் சந்தோசமா தான் இருப்பேன் அப்படின்னு சொல்லிருறாங்க. அதுக்கு அண்ணாமலை சொல்றாரு அப்படி கூற விடா இருந்தா நம்ம ரெண்டு பேரும் தான் போகணும்.

உடனே விஜயா இது என் அப்பா எனக்காக கொடுத்த வீடு நான் எதுக்கு குடிசையில இருக்கணும் அப்படின்னு சொல்றாங்க. அதுமட்டுமில்லாமல் மீனாவோட அப்பாவை பத்தி எல்லாம் பேசுறாங்க. இதுக்கு மீனா கோவமா  என் அப்பா உழைச்சு வாழ்ந்தவரு யாரு பணத்தையும் எடுத்துட்டு ஓடல அப்படின்னு சொல்றாங்க.

உடனே மனோஜ்க்கு கோவம் வருது ஏய் நீ யார சொல்ற அப்படின்னு கேக்குறாரு. அதுக்கு முத்து .. யாருக்கு குத்துதோ அவங்கள தான் அப்படின்னு சொல்லிடுறாரு. இதுல ரெண்டு பேருக்கும் ஒரு சின்ன வாக்குவாதம் வருது அண்ணாமலை சொல்றாரர் முத்து உனக்கு வேலைக்கு நேரமா இருக்கும் நீ கிளம்புனு .

ஸ்ருதியின் அம்மாவால் வீட்டில் நடக்கும் கலவரம் ;

சுருதியும் ரவி கிட்ட போயி இந்த வீட்ல யாருக்குமே ஜாலியா லைஃபை வாழ தெரியல. எப்ப பாத்தாலும் ஆன்ட்டி மீனாவை திட்டிட்டே இருக்காங்க சீரியல்ல தான் இந்த மாதிரி பார்த்திருக்கேன் அப்படின்னு ரவி கிட்ட புலம்பிட்டு  இருக்காங்க. இப்போ ஸ்ருதியோட அம்மா ஸ்ருதி அப்பாகிட்ட அஞ்சு லட்சம் குடுங்க அப்படின்னு கேக்குறாங்க .

ஸ்ருதி கால் பண்ணி வீட்ல நடந்ததெல்லாம் சொல்லி இருக்காங்க அதனால அவங்களும் அதை பயன்படுத்திக்கிட்டு எப்படியாவது சண்டை வர வச்சு ஸ்ருதிய தனி குடுத்தனம்  கூப்பிட்டு வந்தரனும்னு அவங்க அப்பா கிட்ட பேசுறாங்க. உடனே அவரும் செக் கொடுத்து அனுப்பி விடுறாரு .சுருதி  அம்மா வீட்டுக்கு வர்ராங்க .

எல்லாரும் வரவேற்கிறாங்க. அதோட இன்னைக்கு எபிசோடு முடிந்தது .நாளைக்கான ப்ரோமோல மனோஜுக்கும் முத்துக்கும் பெரிய சண்டை நடக்குது நாளைக்கு என்ன நடக்க போகுதுன்னு நாளைய  கதைக்களத்தில் பார்ப்போம்.

Dinasuvadu Media @2023