புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணி செய்து வந்த டாக்டர் வி.சாந்தா அவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இவர்களது இழப்பு புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும் சமூக சேவகருமான டாக்டர் வி.சாந்தா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். 93 வயது உடைய இவரது வாழ்நாள் பலருக்கும் வாழ்வளித்த ஒன்றாக இருந்துள்ளது. இந்நிலையில் இவரது இழப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 65 ஆண்டுகளுக்கு மேலாக தனது ஓய்வற்ற சமூக சேவை மூலம் அனைத்து தரப்பு மக்களின் அன்பையும் பெற்ற வி.சாந்தா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
மேலும், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை தன்னலமின்றி அர்ப்பணிப்போடு செயல்பட்டு மீட்டெடுக்க பணியாற்றியதால் மாண்புமிகு அம்மா அவர்கள் உட்பட அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் எனவும், இவர் காலமான செய்தி அறிந்து தான் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் இவரது மறைவு புற்றுநோய் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…