தமிழக ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அள்ளிக்கவில்லை. குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ரவி கையெழுத்திடவில்லை.
தொடர்ந்து தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்றும், மத்திய அரசுக்கு சாதகமாக அவர்கள் கூறுவதற்கு மட்டும் செயல்படுகிறார் என்றும், அதனால் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி நடைபெற்று வருகிறது.
இந்த பேரணியை சைதாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் டி.ராஜா தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அவர்களுக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகை வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார். கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,…
சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…
சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…