வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால்,பெண்ணுக்கு பெற்றோர் செய்த சடங்கு..!

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததால்,நர்மதா நதியில் குளிக்க செய்து, ‘தூய்மைப்படுத்துதல்’ சடங்கின் போது அவரது தலைமுடி வெட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் பெதுலில் உள்ள ஒரு இளம் பெண்,வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்து கொண்டதால், அவரது குடும்பத்தினரால் ‘தூய்மைப்படுத்துதல்’ சடங்கு செய்ய வற்புறுத்தப்பட்டார். அச்சடங்கின் போது,அவரது தலைமுடி வெட்டப்பட்டு,பின்னர் நதியில் குளிக்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது,ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதால் பாதிக்ககப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் புகார் அளித்து போலீஸ் பாதுகாப்பு கோரிய பின்னர் இது குறித்த உண்மை வெளிச்சத்திற்கு வந்ததாக பெதுல் காவல்துறை கண்காணிப்பாளர் சிமலா பிரசாத் கூறியுள்ளார்.

அப்பெண் அளித்த புகாரின்பேரில், அவரது பெற்றோர் உட்பட பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.எனினும்,இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

ஹிந்துஸ்தான் டைம்ஸின் அறிக்கையின்படி, 24 வயதான பெண், தனது புகாரில், தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சமூகத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். டிசம்பரில் அவர் தலித் நபருடன் தங்கத் தொடங்கிய பிறகு அவரது திருமணம் அவரது குடும்பத்தினருக்குத் தெரிந்தது.

அப்பெண் இருக்கும் இடத்தைப் பற்றி அறிந்திருந்தும், அவரது தந்தை ஜனவரி 10, 2021 அன்று தனது மகளை காணவில்லை என்று புகார் அளித்தார்.அதைத் தொடர்ந்து, அவர் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு அவரது குடும்பத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து,ஆகஸ்ட் மாதம்,அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரை தூய்மைப்படுத்துவதற்காக(purified)நர்மதா நதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து அப்பெண் கூறுகையில்,”இந்த சடங்கு பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் பின்னர் என் குடும்பத்தினர்  நான் ஒரு தலித் ஒருவரைத் திருமணம் செய்ததற்காகதான் என் முடி வெட்டப்பட்டு,ஆற்றில் குளிக்க வைத்து தூய்மைப்படுத்தப்பட்டதாக கூறினார்கள்.இப்போது, என் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நான் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்துகிறார்கள்.இதனால்,கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி, நான் ஹாஸ்டலில் இருந்து புகார் கொடுக்க வந்தேன்”,என்று அந்த பெண் கூறியதாக தகவல் தெரிவிக்கிறது.

இதனைத் தொடர்ந்து,அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியின் குடும்பத்தினர் தங்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டினார்.இதனால், காவல் துறையினரிடம் பாதுகாப்பு கோரினர்.

இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது, தம்பதியினரின் பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளூர் புறக்காவல் நிலையத்தின் பொறுப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளார்.

Recent Posts

சமூக பொறுப்பு குறித்து நல்லா பேசுறீங்க.. வாக்களிக்க வராதது ஏன்? ஜோதிகா நச் பதில்.!

Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…

1 min ago

ஹெட் மாதிரி கோலி விளையாடினாள் போதும் உடனே மக்கள் விமர்சிப்பாங்க! இர்பான் பதான் காட்டம்!

Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…

2 mins ago

தேர்தல் சமயம்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.? உச்சநீதிமன்றம் கருத்து.!

Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…

2 mins ago

நாகூர் ஸ்பெஷல்.! கட்டுசோறு செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…

18 mins ago

மேற்கு வங்க ஆளுநருக்கு எதிரான பாலியல் புகார்.! தற்போதைய நிலவரம் என்ன.?

C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…

44 mins ago

உங்கள் நகத்தை வைத்து உங்கள் அகத்தின் ஆரோக்கியத்தை தெரிஞ்சுக்கோங்க.!

Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…

1 hour ago