நாளை மறுநாள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தைத்தொடர்ந்து, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கார்த்திகை தீப திருநாள் அன்று அறிவித்தார்.
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பை பல அரசியல் தலைவர்களும், விவசாயிகள் வரவேற்றனர். மேலும், சில கோரிக்கைகளை முன் விவசாயிகள் அதில், விவசாய சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவுச்சின்னம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தனர்.
நாளை மறுநாள் நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விவசாய சங்கத்தினர் இன்று ஒன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் நாளை மறுநாள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.
3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதா நாளை மறுநாள் தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…