சென்னை முதலை பண்ணையில் அறிய வகை அல்டாப்ரா ஆமையை கடத்தியது சர்வதேச வணிகக் கும்பல் என முதலைப் பண்ணை இயக்குனர்.
சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உலகின் இரண்டாவது மிகப்பெரியது என்ற பெருமைக்கு சொந்தமான அல்டாப்ரா என்ற 55 வயதுடைய ஆமை, முதலை பண்ணையில் இருந்து காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது. சர்வதேச சந்தையில் இந்த ஆமையின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்பட்டது. அல்டாப்ரா ஆமை 150 ஆண்டுகள் வரை உயிர் வாழும். 1.5 மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடிய இந்த ஆமை 200 கிலோ வரை எடை இருக்கும்.
சென்னை முதலை பண்ணையிலிருந்த இந்த இனத்தைச் சேர்ந்த நான்கு ஆமைகள் இருந்துள்ள நிலையில், 55 வயது மதிக்கத்தக்க ஆமை ஒன்று மாயமானது. இதுகுறித்து காவல்துறை கூறுகையில், சுமார் ஆறு வாரங்களுக்கு முன்பே இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. திருடியவர்கள், அருகிலுள்ள எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிக்காமல் இந்த சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர் என்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறோம் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை முதலை பண்ணையில் அறிய வகை அல்டாப்ரா ஆமையை கடத்தியது சர்வதேச வணிகக் கும்பல் என முதலைப் பண்ணை இயக்குனர் ஆல்வின் ஜேசுதாஸ் தெரிவித்தாக கூறப்படுகிறது. முதலைப்பண்ணையின் 44 ஆண்டு வரலாற்றில் நடைபெற்ற முதல் திருட்டு இதுதான் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…