வரவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் செயல்திறன் அது வளர்ச்சியின் அடிப்படையில் எங்குள்ளது என்பதை தீர்மானிக்கும் என்று ஜாக் லீச் தெரிவித்துள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது மற்றும் உள்நாட்டு அணி அவர்களின் முன்னணி ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் விளையாடவுள்ளது.ஏனெனில்,ஸ்டோக்ஸ் தனது மன ஆரோக்கியத்தை கடைபிடிப்பதற்காக விளையாட்டிலிருந்து காலவரையற்ற இடைவெளியை எடுத்துள்ளார் என்று ஈசிபி வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.
எங்கே இருக்கும்?:
இந்நிலையில்,இங்கிலாந்தின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச், இந்தியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் செயல்திறன், வளர்ச்சியின் அடிப்படையில் உள்நாட்டு அணி,எங்கே இருக்கும் என்பதை தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:
நம்பிக்கை:
“ஐந்து வலுவான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், இந்தியாவுக்கு எதிராக வலுவான அணியாக விளையாடுவது, நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது பற்றி நிறைய சொல்லும்.நான் இந்த போட்டிகளில் பந்து வீசுவேன்,சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.விக்கெட் சிறப்பாக இருந்தால் அது உங்கள் திறமையை சற்று மாற்றியமைக்கும்.
முக்கிய எண்ணம்:
நான் தொடர்ந்து அணிக்காக விளையாட நினைக்கிறேன். அதுதான் எனது முக்கிய எண்ணம்: எனது ஆட்டம் நல்ல இடத்தில் இருப்பதை உறுதி செய்தால் அணியில் இருக்கவும் தொடர்ந்து செயல்படவும் முடியும்.
கவனம்:
என் விஷயங்களைச் சிறப்பாக செய்வதற்கான வழி ஒரு நேரத்தில் ஒரு சிறிய பகுதியை எடுத்துக்கொள்வதாகும், நான் இந்த இந்தியா தொடரில் மிகவும் கவனம் செலுத்துகிறேன். நான் நன்றாக விளையாடவில்லை என்றால், நான் குளிர்காலத்தில் (ஆஸ்திரேலியா) ஆஷஸ் தொடரில் பங்கேற்க முடியாது”,என்று தெரிவித்தார்.
இதன்மூலம்,இந்த வருட இறுதியில் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் தனது இடத்தை உறுதியாக்க லீச் சிறப்பாக செயல்பட ஆர்வமாக உள்ளார் என்று புரிகிறது.
சாதிக்க முடியும்:
மேலும்,அவர் கூறியதாவது:”கடந்த காலங்களில் எனது அனுபவங்கள், நோய் அல்லது காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில்,நான் இங்கிலாந்திற்காக விளையாட என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறேன், என்னால் உயர்ந்த மட்டத்தில் சாதிக்க முடியும்”,என்று தெரிவித்தார்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…