அரபிக்கடலில் மே 16 ஆம் தேதி “தக்டே” என்ற புயல் உருவாக வாய்ப்புள்ளது எனவும்,அவ்வாறு உருவாகினால் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாகவுள்ளது.
இந்நிலையில்,அடுத்த இரு நாட்களில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது,வருகின்ற மே 14 ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது பின் தாழ்வு மண்டலமாக மாறும்.
அதன்பின் மே 16ம் தேதி இந்த தாழ்வு மண்டலம் அரபிக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளது.அவ்வாறு புயலாக மாறும் இதற்கு தக்டே என்று பெயர் வைக்கப்படும் என்றும்,மேலும்,இந்த புயல் வலுப்பெற்றால் மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீச்சும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால்,இந்த “தக்டே புயல்” எங்கே கரையை கடக்கும் என்று சொல்லப்படவில்லை.எனினும்,ஒருவேளை இந்த புயல் கேரள கரையோரம் வந்தால் தமிழகத்தில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தற்போது கன்னியாக்குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால்,பேச்சிபாறை உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனிடையே,வருகின்ற மே 16 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதால் மீன் பிடிக்க சென்றுள்ள கன்னியாக்குமரி மீனவர்கள் அனைவரும் 14 ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…