ஆகஸ்ட் 31-க்குள் அமெரிக்க படைகள் வெளியேறாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் – தலிபான்கள் எச்சரிக்கை!

வருகின்ற ஆகஸ்ட் 31-க்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் அங்கிருந்து வெளியேற விரும்பக்கூடிய மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், ஆப்கானிஸ்தான் கலவரம் குறித்து ஆலோசனை செய்வதற்காக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை ஜி 7 அவசர கூட்டத்துக்கு இங்கிலாந்து வீரர் போரிஸ் ஜான்சன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், தலிபான் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் அவர்கள் தெரிவிக்கையில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் தங்களது படைகளை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும் எனவும், இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இரு நாடுகளும் தங்களது படைகளை திரும்பப் பெறுவதற்கு கூடுதல் அவகாசம் கோரினால் அது தங்களிடைய அவநம்பிக்கையை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறக் கூடிய அனைத்து அமைப்புகளையும் வெளியேற்றுவதில், எந்த சிக்கலும் இல்லை எனவும் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

Rebekal

Recent Posts

உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார்! யுவராஜ் சிங் பேச்சு!

Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…

11 mins ago

பிரதமர் பதற்றத்தில் இருப்பது பேச்சிலேயே தெரிகிறது… ராகுல் காந்தி விமர்சனம்!

Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…

28 mins ago

மீண்டும் அதே பிரச்சாரம்… கார்கே கோரிக்கையை ஏற்க மறுக்கும் பிரதமர் மோடி.?

Election2024 : பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மீண்டும் காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி பற்றி விமர்சனம் செய்துள்ளார். . 7 கட்டங்களாக நடைபெற்று வரும்…

39 mins ago

தளபதி 69 நான் எடுத்தா இவுங்க எல்லாரும் இருப்பாங்க! நெல்சன் போட்ட மாஸ்டர் பிளான்?

Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின்…

1 hour ago

இறுதிக்கட்டத்தில் 2ம் கட்டம்… டாப்பில் திரிபுரா… மற்ற மாநிலங்களில் நிலவரம் என்ன?

Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில்…

1 hour ago

தோனி …கோலிலாம் கிடையாது… இவர் தான் ‘டேஞ்சர்’ பிளேயர் ! ஹைடன் கருத்து ..!

Mathew Hayden : ஐபிஎல் தொடரில் மிகவும் ஆபத்தான வீரரான வெளிநாட்டு வீரர் ஒருவரை பற்றி மேத்யூ ஹைடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசி இருந்தார். ஐபிஎல் தொடர்…

1 hour ago