#T20WorldCup2021: எம்.எஸ்.தோனிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நன்றி!

பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று இந்திய அணிக்கு வழிகாட்டியாக செயல்பட உள்ள எம்எஸ் தோனிக்கு, சவுரவ் கங்குலி நன்றி.

பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு வழிகாட்டியாக செயல்பட உள்ள எம்எஸ் தோனிக்கு நன்றி என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்ததாக பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதில் பதிவிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களை நேற்று பிசிசிஐ அறிவித்தது. இத்துடன்  முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்எஸ் தோனி உலகக்கோப்பையில் வழிகாட்டியாக செயல்படுவர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருந்தார்.

இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, நான் துபாயில் இருந்தபோது எம்எஸ் தோனியிடம், டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் ஆலோசகராக வருமாறு தோனியிடம் நான் கேட்டேன். தோனியும் இதற்கு ஒப்புக்கொண்டார்.

இந்த தொடர்பாக நான் பிசிசிஐ-யின் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என அனைவரிடமும் கருத்துக்களைக் கேட்டேன். அவர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்து சம்மதம் தெரிவித்தனர்.

இதனால்தான் விரைவாக இந்த முடிவுக்கு வர முடிந்தது எனத் தெரிவித்திருந்தார்.  இந்த அறிவிப்பிற்கு தோனியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் என பலரும் பிசிசிஐ-யின் முக்கிய முடிவை வரவேற்று வருகின்றனர் என்பது குறிப்பித்தக்கது.

Recent Posts

IPL2024: மழையால் இன்றைய போட்டி ரத்தானது..!

இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…

9 hours ago

காசுலாம் போச்சு .. ஆர்சிபி-சிஎஸ்கே போட்டியை பார்க்க டிக்கெட் புக் செய்த ரசிகர் ! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !!

சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…

13 hours ago

3 நொடியில் 100 கி.மீ ஸ்பீடு.. அசுர வேகத்தில் களமிறங்கிய BMW M 1000 XR.!

சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…

13 hours ago

பிளாங்க் உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க .!

Plank exersize-பிளாங்க்  உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…

13 hours ago

மற்றவர்களை கவனிப்பது என்னோட வேலை இல்லை! விமர்சனங்கள் குறித்து இளையராஜா!

சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.  இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…

13 hours ago

அத்துமீறிய இலங்கை மீனவர்கள்.. 14 பேரை கைது செய்த இந்திய கடற்படை.!

சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

13 hours ago