ரோஹித், கோலி அனுபவம் அணிக்கு தேவை! T20 உலகக்கோப்பை குறித்து இர்பான் பதான்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. போட்டிக்கான அட்டவணையும் ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில், இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் அவர்களுடைய அனுபவம் இந்தியாவுக்கு தேவை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய இர்பான் பதான் ” விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இந்த மாதிரியான முக்கிய போட்டிகளில் அணிக்கு தேவைப்படுவார்கள். மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. எனவே, இதற்கு முன்பு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் அங்கு பல போட்டிகளில் விளையாடி இருப்பார்கள்.

உலகக்கோப்பை டி20 அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனா? குழப்பத்தில் ரசிகர்கள்!

எனவே, அவர்களை போல அனுபவம் வாய்ந்த வீரர்களை வைத்து விளையாடும் போது நம்மளுடைய அணிக்கு பக்கபலமாக இருக்கும். இரு வீரர்களை தேர்வு செய்வது அணி நிர்வாகம் உரிமை. என்னை பொறுத்தவரை இந்த இரண்டு வீரர்களும் தேர்வு செய்யவேண்டும் என்பது தான் கருத்து.

தனிப்பட்ட முறையில், நான் விராட்டை டி20 கிரிக்கெட்டில் பார்க்க விரும்புகிறேன், ஏனென்றால் கடைசியாக அவர் விளையாடிய ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகள் அவருக்கு மிகவும் அற்புதமான போட்டிகளில் ஒன்றாகும். அதைப்போல, ரோஹித் சர்மா தனது டி20 பார்முக்கு திரும்பவேண்டும். இரண்டு வீரர்களும் ஒரே களத்தில் பார்க்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்” எனவும் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

Recent Posts

இன்று எலிமினேட்டர்..! முதலாவதாக வெளியேற போவது எந்த அணி ?

சென்னை : ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் -1 போட்டியில் கொல்கத்தா…

43 mins ago

IPL2024: ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற கொல்கத்தா..!

IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…

9 hours ago

லைசன்ஸ் பெற இனி RTO ஆபீஸுக்கு செல்ல வேண்டாம்.. ஜூன் 1 முதல் புதிய விதி அறிமுகம்.!

சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…

14 hours ago

‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ – பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கும் ஹர்பஜன் சிங்!

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…

14 hours ago

படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் பண்ணனும்! பலே திட்டம் போட்ட ரஜினிகாந்த் !

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…

14 hours ago

அடுத்த டார்கெட் கோப்பா அமெரிக்கா தான் !! மெஸ்ஸி ரசிகர்களுக்கு குட் நியூஸ் ..!

சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…

14 hours ago