அயோத்தியில் உள்ள பாபர் மசூதி மற்றும் ராமஜன்மபூமியின் 2.77 ஏக்கர் நிலம் மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பேரும் பிரித்துக் கொள்ளும்படி கடந்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து மூவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் அதனைத் தாண்டி 14 மேல்முறையீட்டு மனுக்களும் இந்த வழக்கின் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது . ஒரு முடிவு எட்டப்படாததால் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
பின்னர் கடந்த ஒரு வாரமாக நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இதனை விசாரித்து வந்தது. மேலும் ஒரு குழு அல்லது மத்தியஸ்தரை வைத்து இந்த பிரச்சனை தீர்க்க முடியுமா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த அறிவுரையை இந்து அமைப்புகள் எதிர்க்க முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக் கொண்டது.
பின்னர் பல தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி எப்.எம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவில் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…