இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் சுல்தான் எந்த மதத்திற்கும் எதிரான படம் இல்லை அது வெறும் தலைப்பு மட்டுமே. 100 அண்ணன்களுக்கும் 1 தம்பிக்குமான கதைதான் இந்த படம் என்று கூறியுள்ளார்.
இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் மேர்வின் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான டீசர் கடந்த 1 ஆம் தேதி வெளியானது அதனை தொடர்ந்து இன்று இந்த படத்திற்கான முதல் பாடலை இன்று மாலை 6 மணிக்கு படக்குழுவினர் வெளியீடவுள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் படத்திற்கான டிரைலரை விரைவில் வெளியீட படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு திண்டுக்கல்லில் படமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் சில இந்து மத அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்தார்கள். சுல்தான் என்று படத்திற்கு தலைப்பு வைத்ததால் மலைக் கோட்டை பகுதியில் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது, “எந்த மதத்திற்கும் எதிரான படம் சுல்தான் இல்லை இது வெறும் தலைப்பு மட்டுமே. 100 அண்ணன்களுக்கும் 1 தம்பிக்குமான கதைதான். என்றும் கூறியுள்ளார். காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன், போன்றவை கொண்ட முழு ஜனரஞ்சக திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…
சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…
Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…