இந்தியா

சிறுவனை தாக்கிய தெருநாய்கள் ..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி!!

தெலுங்கானா : சமீபத்தில் அதிகமாக தெருநாய்கள் தாக்கிய செய்திகள் கேட்பதோடு வீடியோ கட்சிகளும் வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அதே போல ஒரு சம்பவம் தற்போது ஹைதராபாத்தில் உள்ள சங்கரெட்டியில் இருக்கும் ஸ்ரீநகர் காலனியில் எனும் இடத்தில் ஒரு சிறுவனை 6 தெரு நாய்கள் சுற்றி வளைத்து தாக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது சம்மந்தமான காட்சிகள் அருகில் இருந்த வீட்டின் கேமராவில் பதிவாகி உள்ளது. அது வீடியோவாக தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், “அச்சிறுவனை 6 தெருநாய்கள் சுற்றி வளைத்து தாக்கும், நீண்ட நொடிகளுக்கு பிறகு வீட்டில் இருந்து வெளிய வந்தவரை கண்டவுடன் அந்த தாக்குதலை நிறுத்தி விட்டு அந்த நாய்கள் அங்கிருந்து ஓடிவிடும்”.  இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதனால் காயம் ஏற்பட்ட அந்த சிறுவன், அரசு மருத்துவாமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கானா மாநிலத்தில் சிறு குழந்தைகள் மீது தெருநாய்கள் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகவே இருந்து வருவதை தெலுங்கானா உயர்நீதிமன்றம் தீவிரமாகக் கண்டித்ததுள்ளது.

மேலும், தெருநாய்களின் தொல்லையால் சிறுவர்கள் உயிரிழப்பது குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்ததுடன், இந்த பிரச்னைக்கு தீர்வு காண தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், இது போன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recent Posts

கூகுள் மேப்புக்கு இனி ஆப்பு தான் ..! புவனை வைத்து கலக்கும் இஸ்ரோ!

ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை…

5 hours ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்திய அணியை அறிவித்தது தடகள சங்கம் ..!

ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்…

6 hours ago

பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!

பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…

7 hours ago

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

11 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

11 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

11 hours ago