harbhajan singh and virat kohli [File Image]
விராட் கோலி : இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்காத நிலையில், படிபடியாக பழைய பார்முக்கு திரும்பி வருகிறார். விராட் கோலி பார்ம் பற்றி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பேசி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ஹர்பஜன் சிங் ” விராட் கரீபியன் தீவுகளுக்கு வந்ததில் இருந்து, பந்து அவருடைய பேட்டிற்கு நன்றாக வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பந்து அவருடைய பேட்டின் நடுப்பகுதியில் தான் படுகிறது. இன்னும் அவர் பெரிய ரன்களை அடிக்கவில்லை என்றாலும் கூட டி20களில் நீங்கள் பார்க்க வேண்டியது 20 மற்றும் 30 களில் தாக்கத்தை ஏற்படுத்துவதை தான்.
கடந்த சில போட்டிகளாக விராட் கோலி அதனை சரியாக செய்து வருகிறார். அவர் செட் ஆனவுடன், அவர் பெரிய ஸ்கோர் செய்ய முடியும், அது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரும் என்று நம்புகிறேன். இப்போது தான் அவர் ஆரம்பித்து இருக்கிறார். இனிமேல் வரும் போட்டிகளில் எல்லாம் அவருடைய அதிரடியான ஆட்டத்தை நாம் எதிர்பார்க்கலாம். கண்டிப்பாக வரும்” எனவும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய ஹர்பஜன் சிங் ” இப்போது மட்டும் இல்லை எப்போதும் கோலி சிறந்த பார்மில் தான் இருக்கிறார். மைதானம் சரியாக அமையவில்லை என்றால் சில வீரர்கள் இப்படி ஒரு சில ஆட்டங்களில் தடுமாற்றம் அடைவது வழக்கம் தான். உலகக்கோப்பை தொடங்கியதில் இருந்து கோலி தனது முந்தைய ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக 28 பந்துகளில் 37 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடினார்” எனவும் கூறியுள்ளார்.
டீன்ஸ் : இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அடுத்ததாக 'டீன்ஸ்' என்ற திரைப்படத்தினை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வித்தியாச வித்தியாசமான படங்களை இயக்கி மக்களை கவர்ந்து…
ஜார்கண்ட்: சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில்…
பிசிசிஐ : நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிசிசிஐ பரிசுத்தொகையாக ரூ.125 கோடிக்கு அளித்துள்ளனர். அதனை இந்திய வீரர்கள் எப்படி பிரித்துக்கொள்வார்கள் என்பதை…
மின்தடை : நாளை ( ஜூலை 9 /7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடசென்னை மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை,…
சேலம்: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது என இபிஎஸ் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். கடந்த ஜூலை 5ஆம் தேதி…
அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக…