ட்விட்டரில் கொரோனா வெவ்வேறு பாலினங்களை வித்தியாசமாக பாதிக்கிறதா..? என்ற கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை பதில்.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2 வது அலை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், தற்போது வீழ்ச்சியை அடைந்து வருகிறது, பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் சங்கிலியை வெற்றிகரமாக முறியடித்து வருகின்றது.
மேலும் கொரோனா 2 வது அலை மனிதர்களை பெரிதும் அச்சுருத்தி வந்த நிலையில் தற்போது விலங்குகளின் உயிர்களையும் பதம் பார்த்து வருகின்றது. இதையடுத்து ட்விட்டரில் அமீஷ் என்ற நபர் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் “கொரோனா வெவ்வேறு பாலின மக்களை வித்தியாசமாக பாதிக்கிறதா..? நான் வீட்டிற்குள் மட்டுமே இருக்கும் ஒரு பெண், நான் பாதிக்கப்படலாமா?” என்று கேட்டுள்ளார்.
அதற்கு கோவிட் – 19 செயற்குழு தலைவர் டாக்டர். என்.கே. அரோரா இதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று பதில் ட்விட் செய்துள்ளார். மேலும் NTAGI(National Immunization Technical Advisory Group) கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வலியுறுத்துகிறது என்றும், உங்கள் முறை வரும்போது கொரோனா தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக்கொள்ளுமாறும் மத்திய சுகாதாரத்தறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…