முழு ஊரடங்கை பயன்படுத்தி சில கருப்பாடுகள் செயற்கையாக விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 24-ம் தேதியில் இருந்து மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில கடைகளில் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து தமிழக அரசு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்துள்ளது.
இதனையடுத்து, காய்கறி விலை உயர்வை கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, முழு ஊரடங்கை பயன்படுத்தி சில கருப்பாடுகள் செயற்கையாக விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி உள்ளனர். காய்கறிகளின் விலையை அதிகரித்து, மக்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அதிக விலைக்கு விற்பவர்களை வணிகம் செய்யும் நிலையிலிருந்து நீக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…