தமிழகத்தில் ஏப்.15- 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

TN Schools: தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை.

தமிழ்நாட்டில் 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 18 முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஏப். 2 முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் ஏப். 13ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏப்ரல் 10ம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வை ஏப்ரல் 22ம் தேதிக்கும், ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவிருந்த சமூக அறிவியல் தேர்வை ஏப்ரல் 23ம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

இப்ராஹிம் ரைசியின் மரணத்தை கொண்டாடும் ஒரு தரப்பு மக்கள்? என்ன காரணம்?

சென்னை : ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் மரணத்துக்கு உலக நாடுகளின் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் ஈரானில் ஒரு…

5 mins ago

தொடர் கனமழை 5 நாளில் 11 பேர் பலி! வெளியான எச்சரிக்கை!

சென்னை : தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 5 நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், தொடர்…

29 mins ago

திரவ நைட்ரஜன் கலந்த பான் மசாலா சாப்பிட்ட சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை!

சென்னை: திரவ நைட்ரஜன் கலந்த பானை சாப்பிட்ட 12 வயது சிறுமி வயிற்றில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் திரவ நைட்ரஜன் கலந்த பான்…

1 hour ago

பிளே-ஆஃப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் உண்டா ? இதுதான் ஐபிஎல் ரூல்ஸ் !

சென்னை : ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றில் நடைபெறும் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா, அதை பற்றி ஐபிஎல் விதிகள் என்ன சொல்கிறது என்பதை பற்றி தற்போது…

2 hours ago

பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும்! திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சென்னை : பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக புதிய பேருந்துகளை…

2 hours ago

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது.! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி…

2 hours ago