ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி கொடுத்துள்ளார்.
மத்திய அரசு நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது. இதைத்தொடந்து மத்திய அரசு பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய மண்டலங்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதனால், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் விரும்பினால் சிவப்பு மண்டலத்திலும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறந்து கொள்ளலாம் என கூறியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது முடிதிருத்தும் தொழிலாளி கோரிக்கையை பரிசீலித்து பெருநகர் சென்னை காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகள், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர மற்ற ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி கொடுத்துள்ளார்.
முடிதிருத்தும் நிலையங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றவும், கையுறை அணிந்து முடிதிருத்துமாறும், கடையின் உரிமையாளர்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினி தெளிக்குமாறும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…