விளையாட்டு

கண்கலங்கிய ரோஹித் சர்மா…போட்டிக்கு பின் பேசியது என்ன?

உலகக்கோப்பை 2024 டி20 :  தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

அசத்தலாக விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதன் பின் 172 என்ற இலக்கை எடுக்க பேட்டிங் களமிறங்கியது இங்கிலாந்து அணி, 16.4 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன்முலம் இந்திய அணி 3-வது முறையாக டி20 உலகக்கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

INDvENG , Semi Final 2 [file image]
இந்திய அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எமோஷனலாக கண்கலங்கினார். விராட் கோலி அவரை பார்த்ததும் கட்டியணைத்து கொண்டார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா  ” இந்த போட்டியில் நாங்கள் நிதானமாக விளையாடி வெற்றி பெற்றதாக நினைக்கிறோம். ஒரு யூனிட்டாக மிகவும் கடினமாக உழைத்தேன், இந்த வெற்றி  அனைவரின் பெரும் முயற்சி.

போட்டியில் நிலைமைகள் சவாலானதாக இருந்தபோதிலும் நாங்கள் அதனை மாற்றி அமைத்தோம். பந்துவீச்சாளர்களும் பேட்டர்களும் எங்களுடைய அணியில் நன்றாக விளையாடினார்கள். ஒரு கட்டத்தில், 140-150 சமமாக இருந்தது. ஆனால் நாங்கள் நடுவில் ரன்களைப் பெற்றோம், நானும் சூர்யாயும் இன்னும் 20-25 ரன்கள் கூடுதலாக பெறலாம் என்று நினைத்தோம்.175 ரன்கள் மிக நல்ல ஸ்கோர், பந்துவீச்சாளர்கள் அருமையாக இருந்தனர். அக்சர், குல்தீப் துப்பாக்கி சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை தொடர்ச்சியாக வீழ்த்தினார்கள்.

விராட் கோலி நம்மளுடைய அணியின் ஒரு தரமான வீரர். அவர் சமீபகாலமாக சரியாக விளையாடவில்லை என்று பேசி வருகிறார்கள். எந்தவொரு வீரருக்கும் இது போன்று நடக்கலாம். பெரிய போட்டிகளில் விராட் கோலியின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம். 15 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடும் போது ஃபார்ம் என்பது ஒரு பிரச்னையே இல்லை. சிறந்த ஆட்டத்தை இறுதிப்போட்டிக்காக விராட் கோலி வைத்திருக்கலாம்” எனவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Recent Posts

பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!

பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…

31 mins ago

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

5 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

5 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

5 hours ago

ஓட்டுனர் இல்லாமல் ஓடிய பேருந்து…டயரில் சிக்கி ஒருவர் பலி…கண்கலங்க வைக்கும் வீடியோ..!

உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…

6 hours ago

அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! DA 4% உயர்வு..!

குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…

6 hours ago