“ரிடையர்ட் ஆகாதிங்கனு இளம் வீரர்கள் சொன்னாங்க” யுனிவர்சல் பாஸ் பெருமிதம்!

கிறிஸ் கெயிலை ரிடையர்ட் ஆகவேண்டாம் என்று பஞ்சாப் அணியின் இளம் வீரர்கள் கூறியுள்ளார்கள். 

பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் நடப்பாண்டு தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை இந்த சீசனில் மட்டும் 5 போட்டிகள் விளையாடி 177 ரன்கள் அடித்துள்ளார். அதிகம் சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் என பல சாதனைகளை வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் –  கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தனர்.

அடுத்ததாக 150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி மிகவும் சிறப்பாக விளையாடி 18.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு இருந்து 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் மிகவும் அதிரடியாக மந்திப் சிங் மற்றும் கிறிஸ் கெயில் விளையாடினார்கள்.  ஆம் மந்திப் சிங் 56 பந்துகளில் 66 ரங்களும் கெயில் 29 பந்துகளில் 51 ரங்களும் அடித்தனர். இதன் காரணமாகவே பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து பேசிய கிறிஸ் கெயில் கூறியது ” நான் சிறப்பாக ஆடினேன் என்று உணர்கிறேன். எங்கள் அணியில் உள்ள இளம் வீரர்கள் என்னை ரிடையர்ட் ஆக வேண்டாம் என்று கூறினார்கள்” என்று கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

56 mins ago

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

1 hour ago

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…

1 hour ago

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

2 hours ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

2 hours ago

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…

2 hours ago