அசாமில் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை தாக்கிய காட்சி வெளியாகி உள்ள நிலையில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் பல இடங்களில் அவமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அசாமில் உள்ள ஹோஜோய் மாவட்டத்தில் உள்ள உதலி நகரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி அனுமதிக்கப்பட்ட 3 மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் 20 பேர் மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர் சியூச் குமார் என்பவரை சரமாரியாக அடித்துள்ளனர். அவர்களை தடுக்க சென்ற மருத்துவமனை ஊழியர்களையும் அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு இந்திய மருத்துவக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளது. இதனை அடுத்து மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்ய போலீசாருக்கு அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள்,…
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…
Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…
Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…