சீனா நிதியிலா? ராஜீவ் அறக்கட்டளை??? ராகுலுக்கு பாஜக நறுக்!

காங்கிரளின் சி  ராஜிவ் அறக்கட்டளைக்கு தற்போது வரை  சீனா நிதி அளித்து வருவதாக  பா.ஜக பகிரங்க  குற்றம்சாட்டி உள்ளது.

லடாக் எல்லையில், இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து, பா.ஜக.,வும், காங்கிரசும் உள்நாட்டில் வார்த்தை போரில் ஈடுபட்டதை நாடே பார்த்தது. லடாக் தாக்குதல் தொடர்பாக, மத்திய அரசு மீதும், பிரதமர் தும், காங்கிரஸ் எம்.பியும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான  ராகுல் காந்தி, தனது  ‘டுவிட்டர் பக்கத்தில்’ தினமும் இது குறித்து குற்றம் சுமத்தி வருகிறார். ராகுலின் ட்விட்டுக்கு, பா.ஜக., சார்பில், பதில் அளிக்கப்பட்டும் வருகிறது.இவ்வாறு உள்ளே புகைந்து கொண்டிருக்க இதில் மேலும் பற்றவைப்பது போல  மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ரவிசங்கர் பிரசாத்  கூறிய கருத்து அமைத்துள்ளது.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: கடந்த, 2017ல், டோக்லாமில், இந்திய – சீன படைகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட தருணம்.ஆனால் அப்போது இங்கு டில்லியில் இந்தியாவிற்கான சீன துாதரை, ராகுல் காந்தி  ரகசியமாக சந்தித்தார். தற்போது, கல்வானில் நடந்த மோதலின் போதும், நாட்டை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது.காங்கிரஸ் கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.அது பற்றி, எதுவும் தெரிவிக்காமல், அக்கட்சி மவுனம் சாதித்து வருவதாகவும் தெரிவித்த அவர்  காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும், ராஜிவ் அறக்கட்டளையின் தலைவராக, சோனியா உள்ளார்.

இக்கட்டளையின்  உறுப்பினர்களாக, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா, சிதம்பரம் என உள்ளிட்ட பலர் உள்ளனர். இந்த அறக்கட்டளைக்கு 2005 – 06ம் ஆண்டில் சீன துாதரகம் நிதி அளித்துள்ளது.இது குறித்து  2005 – 06ம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையில், ராஜிவ் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.

சீனாவிடமிருந்து நிதியுதவி பெறுவது தான், காங்கிரஸ் செய்து கொண்ட ஒப்பந்தமா? இந்த நிதியுதவியால் தான், ராகுல், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா? என்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ள ரவிசங்கர் பிரசாத் இது குறித்து  காங்கிரஸ்  நாட்டு மக்களுக்கு விளக்கம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

kavitha

Recent Posts

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்.! மக்கள் கடும் அவதி!

Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…

37 mins ago

நிறைவு பெற்ற இரண்டாம் கட்ட தேர்தல்…88 தொகுதிகளில் 63.50% வாக்குப்பதிவு.!

Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…

57 mins ago

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி – மும்பை இன்று மோதல் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…

1 hour ago

பிரம்ம முகூர்த்தத்தின் ரகசியம் தெரிஞ்சா..இந்த நேரத்தை மிஸ் பண்ண மாட்டீங்க .!

பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…

2 hours ago

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

9 hours ago

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

12 hours ago