38 அணிகள்…. இன்று 16 போட்டிகள்! தொடங்கியது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்…

38 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் தொடரான 2023-24 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் ‘எலைட்’, ‘பிளேட்’ என்று இரு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எலைட் பிரிவில் உள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

2023-24 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் அங்கம் வகிக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதன்பின், அரையிறுதி, இறுதிப்போட்டி நடைபெறும்.

டி20 போட்டிகளில் விளையாட தயாராக இருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி?

மோசமான இடத்தை பெறும் 2 அணிகள் அடுத்த சீசனில் ‘பிளேட்’ பிரிவுக்கு தரம் இறக்கப்படும். அதுபோன்று,  ‘பிளேட்’ பிரிவில், கடந்த சீசனில் எலைட் பிரிவில் இருந்து தரம் இறக்கப்பட்ட நாகலாந்து, ஐதராபாத் மற்றும் மேகாலயா, சிக்கிம், மிசோரம், அருணாசலபிரதேசம் ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சீசனில் ‘எலைட்’ பிரிவுக்கு முன்னேறும். இந்த நிலையில், தொடக்க நாளான இன்று 16 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இன்று குஜராத்தில் நடைபெற்று நடக்கும் போட்டியில் தமிழ்நாடு, குஜராத் அணிகள் மோதுகின்றன. காலிறுதி போட்டிகள் பிப்.23-ம் தேதியும், அரையிறுதி போட்டிகள் மார்ச் 2-ம் தேதியும், இறுதிப்போட்டி மார்ச் 10-ம் தேதியும் நடைபெறுகிறது.