ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என காங்கிரஸ் பகல் கனவு காண்கிறது – ஸ்மிருதி இராணி…!!

ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று காங்கிரஸ் பகல் கனவு காண்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி விமர்சித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் நடந்த நிகழ்ச்சியின் போது, பேசிய ஸ்மிருதி இராணி, காங்கிரஸ் ஆட்சியில் அமேதி தொகுதி வளர்ச்சியடையவில்லை என்றார். கடந்த 2017-ல், இங்குள்ள 5 சட்டசபை தொகுதி தேர்தல்களிலும், காங்கிரஸ் தோல்வியடைந்ததாக கூறினார்.

அயோத்தி விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை வேகப்படுத்தாதது ஏன்? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்க வேண்டும் என்றும் ஸ்மிருதி இராணி வலியுறுத்தினார்.

Leave a Comment