புஷ்பா பட பாணியில் காரின் மேற்கூரையில் 130 கிலோ கஞ்சா கடத்தி 2 பேர் சிறப்பு அமலாக்கத்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.
தெலுங்கு படமான புஷ்பா எனும் திரைப்படத்தில் நாயகன் அல்லு அர்ஜுன் சட்டவிரோதமாக மரக்கட்டைகளை கடத்துவதற்கு வெவ்வேறு பாணிகளை கையாளுவார். அதில் ஒன்று வாகனத்தில் மரக்கட்டைகளை கடத்துவது போல காட்சி படுத்தப்பட்டு இருக்கும்.
கிட்டத்தட்ட அதே பாணியில் அண்மையில் சில கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று அதனை, போலீசார் லாவகமாக பிடித்துள்ளனர். அப்படித்தான், அண்மையில், 130 கிலோ அளவில் கடத்தப்பட இருந்த கஞ்சா பிடிபட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் பொலேரோ காரில் மேற்கூரையில் 130 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து வந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு அமலாக்க பிரிவினர் சோதனை செய்து கண்டுபிடித்தனர்.
இந்த குற்ற செயலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு தற்போது போலீசார் விசாரணையில் உள்ளனர்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…