இன்றைய 38-வது போட்டியில் பஞ்சாப் Vs டெல்லி அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.
டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். தொடக்கத்திலே பிருத்வி ஷா 7 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர், இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட் இருவரும் தலா 14 ரன் எடுத்து வெளியேறினர்.
இதைத்தொடர்ந்து, ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடி வந்த ஷிகர் தவான் சதம் விளாசி, 106* ரன்கள் குவித்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். 165 ரன் இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வால், ராகுல் இருவரும் இறங்கினர்.
ராகுல் 15 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர், இறங்கிய கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடி 29 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து, மாயங்க் அகர்வால் 5 ரன் எடுத்து வெளியேற அணி மோசமான நிலையில் இருந்தபோது ,மத்தியில் களம் கண்ட நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
சிறப்பாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் அரைசதம் விளாசி 53 ரன்கள் குவித்தார். இறுதியாக பஞ்சாப் அணி 19 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். பஞ்சாப் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…