சத்தீஸ்கர் அரசு சார்பில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு பதிலாக, சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பஹால் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பல மாநிலங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், தடுப்பூசி போட்டபின் வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறுவதுண்டு. இது குறித்து பல்வேறு சர்ச்சையான பேச்சுகள் எழுந்த போதும், மத்திய அரசு சார்பில் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
மக்களுக்கு போதுமான தடுப்பூசியை, மத்திய அரசால் வழங்க இயலாத காரணத்தால் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகள் உலகளாவிய டெண்டர் மூலமாக தாங்களாகவே தடுப்பூசிகளை வாங்கி மக்களுக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான முன் பதிவினை செய்ய, கோவில் இணையதளத்தை மத்திய அரசு ஆரம்பித்தது. அது போல ‘சி ஜி டீக்கா’ என்ற பெயரில் சத்தீஸ்கர் அரசு தனியாக ஒரு இணைய பக்கத்தை உருவாக்கி 18 வயது முதல் 14 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி முன்பதிவு மேற்கொண்டு வருகிறது. இந்த இணையத்தில் பதிவு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு, சத்தீஸ்கர் அரசு சார்பில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு பதிலாக, சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பஹால் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கூறுகையில், யாருடைய புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற போட்டி போட வேண்டிய நேரம் இது கிடையாது. இதன் மூலம் விளம்பரங்களை தேடும் சத்தீஸ்கர் அரசு உடனடியாக தங்களது இதுபோன்ற நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்த சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், டி.எஸ்.சிங்தியோ 18 வயது முதல் 44 வயது வரையிலான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நிதியினை மாநில அரசு கொடுக்கிறது. மத்திய அரசு பணம் கொடுக்கும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறும்போது, மாநில அரசு செலவு செய்யும் சான்றிதழில் முதல்வர் படம் ஏன் இருக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…