இந்தியா

பிரதமர் மோடி பதிலுரை.. எதிர்கட்சிகள் கடும் அமளி..! சபாநாயகர் இருக்கை முற்றுகை….

டெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

18வது மக்களவை கூட்டத்தொடர் முதல் கூட்டம் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று மற்றும் இன்று மக்களவை உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர் . நேற்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றியதை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி உரை ஆற்றுகிறார்.

அவர் பேசுகையில், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பதிலளிக்க நான் இங்கு வந்துள்ளேன். நமது குடியரசுத் தலைவர் அவரது உரையில் நமது நாட்டை பற்றியும் அதன் உறுதி பற்றியும் விரிவாகக் கூறியுள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் முக்கியமான சில பிரச்சினைகளை அதில் குறிப்பிட்டுள்ளார் என்று கூறினார்.

மேலும் பேசுகையில், நேற்றும் இன்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவர் உரை குறித்த அவர்களது கருத்துக்களை கூறியுள்ளனர். குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக முதன்முறையாக வந்தவர்களும் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளார். அவர்கள் பாராளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் பின்பற்றினர். அவர்களின் நடத்தை அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரைப் போல இருந்தது. அவர்களின் கருத்துக்களால் இந்த விவாதத்தை மிகவும் மதிப்புமிக்கதாக மாறியது.

உலகின் மிகப்பெரிய தேர்தல் விழாவில், பொதுமக்கள் எங்களை (பாஜக) தேர்ந்தெடுத்துள்ளனர், சிலரது (எதிர்க்கட்சிகள்) வேதனையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து பொய்களை அவர்கள் பரப்பிய போதிலும், பெரும் தோல்வியை மட்டுமே அவர்கள் சந்தித்தனர்.

வளர்ச்சி அடைந்த பாரதத்திற்காக நாங்கள் உழைத்துள்ளோம். 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் ஊழல் செய்திகளே அதிகம் இடம்பெற்று வந்துள்ளன என்று பிரதமர் பதிலுரை ஆற்றி கொண்டு இருக்கும்போது எதிர்க்கட்சிகள் , ‘மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி பேச வேண்டும்’ என கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுப்பட்டனர். இருந்தும் பிரதமர் மோடி தனது பதிலுரையை தொடர்ந்து ஆற்றி வந்தார்.

எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததால், ” பிரதமர் பேசும் போது கண்ணியத்துடன் உறுப்பினர்கள் மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்கட்சியினரை கேட்டுக்கொண்டார். இருந்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததால் மக்களவையில் பெரும் சலசலப்பு நிலவி வருகிறது.

Recent Posts

இன்று அதிகாலை புத்தமத வழக்கப்படி ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்.!

சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலானது பொத்தூரில் இன்று அதிகாலை 1 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) அன்று…

9 mins ago

அபிஷேக் – ருதுராஜ் அசத்தல்..! விட்டதை பிடித்த இந்திய அணி …100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ZIMvsIND : இன்று நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே அணி இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா, ஜிம்பாப்வே…

14 hours ago

மக்களே ..! நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் ..!

மின்தடை  : நாளை ( ஜூலை 8/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடக்கு கோவை துடியலூர், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம்,…

19 hours ago

உங்க குழந்தைங்க கீரை சாப்பிட மாட்டாங்களா? அப்போ இது மாதிரி செஞ்சு கொடுங்க.!

மணத்தக்காளி கீரை -கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மணத்தக்காளி கீரை= இரண்டு கைப்பிடி அளவு உளுந்து= ஒரு…

24 hours ago

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

2 days ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

2 days ago