டிஜிட்டலில் களமிறங்கும் பிரசன்னா.! இயக்குநர் யார் தெரியுமா.?

பிரசன்னா அடுத்ததாக ஓடிடி தளத்திற்காக குறும்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும், அதனை பரத் நீலகண்டன் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் பிரசன்னா. கடைசியாக அருண் விஜய்யுடன் இணைந்து மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் தற்போது வெப் சீரிஸில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு ஓடிடி தளமான ஆஹா ஒரு புதிய வெப் சீரிஸை தயாரிக்கிறார். அந்த வெப் சீரிஸில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், கிஷோர், ரோகிணி, அபிராமி வெங்கடாசலம், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் பிரசன்னா நடிக்கும் எபிசோடை பரத் நீலகண்டன் இயக்குவதாகவும், அந்த ஆந்தலாஜி குறும்பட எபிசோடிற்கு ‘திரவம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர் கடந்தாண்டு அருள்நிதி மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான ‘k13’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவரான பிரசன்னாவுடன் இரண்டு முறை பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றும், இந்த முறை அவரை வைத்து குறும்படம் இயக்குவதாகவும், விரைவில் இதனை குறித்த மற்ற விவரங்கள் வெளிவரும் என்று கூறினார்.

Recent Posts

42-வது ஐபிஎல் போட்டி .. கொல்கத்தா – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…

26 mins ago

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

56 mins ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

1 hour ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

2 hours ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

2 hours ago

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…

3 hours ago