இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்ரஹ்மான் இசைமைத்துள்ளார்.
இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து டீசர், மற்றும் முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்களேன்- திருட்டு கதை சர்ச்சை… “விருமன்” திரைப்படம் வெளியாவதில் சிக்கல்…?
இதனை தொடர்ந்து தற்போது படத்திற்கான இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 6ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாம்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களும் கலந்து கொள்வார்களாம். ஏனென்றால் இதற்கு முன்பு டீசர் மற்றும் முதல் பாடல் வெளியீட்டு விழாவில் கொஞ்சம் கொஞ்சம் பேர்கள் தான் கலந்து கொண்டிருந்தார்கள். எனவே, இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக படத்தில் நடித்த அனைவரையும் அழைக்கப்படுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…