சிலை கடத்தல் வழக்குகள்! பொன் மாணிக்கவேல் தரப்புக்கு அதிரடி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

  • சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் பொன் மாணிக்கவேலுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு பதவிக்காலம் சென்ற மாதம் 30ஆம் தேதி நிறைவுற்றது.
  • அதனால், பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் ஆவணங்களை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

சிலை கடத்தல் சிறப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு பதவி காலம் முடிவு பெற்றபிறகு, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க மேலும் பதவி காலத்தை நீடித்து உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அந்த பதவி காலம் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி நிறைவு பெற்றது.

இதனை தொடர்ந்து பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த வழக்கில் ஆவணங்களை பொன் மாணிக்கவேல் இம்மாதம் 2ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது. ஆனால் அவர் சமர்ப்பிக்கவில்லை ஆதலால், தமிழ்நாடு அரசு, பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டது. அதற்கடுத்து பொன் மாணிக்கவேல் சார்பில் டிசம்பர் 16ஆம் தேதி வரை காலக்கெடு கேட்கப்பட்டது.

அதன்படி விசாரணை நேற்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாயீ தீபக் கூறுகையில், சிலை கடத்தல் தொடர்பான 17,754 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுவிட்டதாக கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் பேசிய வழக்கறிஞர் முகில் ரோத்தகி, பொன் மாணிக்கவேல் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் முக்கிய சான்றுகள் இல்லை. என கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ‘ இன்னும் இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசிடம் உரிய ஆணவன்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி பொன் மாணிக்கவேல் தரப்பிற்கு உத்தரவிட்டது.’ மேலும் வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிடபட்டது.

 

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

5 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

5 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

5 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

5 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

6 hours ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

6 hours ago