பிரதமர் பதவி மோடிக்கு நிரந்தரம் இல்லை.! முன்னாள் ஆளுநர் எச்சரிக்கை.!

பிரதமர் பதவி என்பது நிரந்தரம் இல்லை. அந்த பதவியில் இருந்து ஒருநாள் மோடி விலக நேரிடும் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். – மேகாலயா முன்னாள் ஆளுநர்.

பிரதமர் பதவி என்பது நிரந்தரமில்லை. அதில் இருந்து மோடி விலக நேரிடும் என மேகாலயா முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கலந்து கொண்டார். அதில் பேசிய இவர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

அவ பேசுகையில், அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பது, இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தும் திட்டமாகும். பிரதமர் பதவி என்பது நிரந்தரம் இல்லை. அந்த பதவியில் இருந்து ஒருநாள் மோடி விலக நேரிடும் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்.

இனி அடுத்தடுத்த நாட்களில் நாட்டில் பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட தொடங்குவார்கள். நாட்டில் பல்வேறு போராட்டங்கள் தொடங்கும் என்பது உறுதி. விவசாயிகள் தங்கள் உரிமைக்காக விரைவில் போராட்டம் தொடங்குவார்கள் என மேகலயா முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Leave a Comment