மறைந்த வசனகர்த்தா ஆரூர்தாஸ் உடலுக்கு முதல்வர் அஞ்சலி..!

மறைந்த வசனகர்த்தா ஆரூர்தாஸ் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி.

“பாசமலர்” உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதி, திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா திரு.ஆரூர்தாஸ் அவர்கள் நேற்று மாலை 6:40 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆரூர் தாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்திருந்த நிலையில், தற்போது ஆரூர்தாஸ் இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

Leave a Comment