திரிபுரா வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு இன்று சுமார் ரூ.700 கோடி அளவிலான நிதியை முதல் தவணையாக பிரதமர் மோடி வழங்க உள்ளார்.
திரிபுராவில் ஏராளமான மக்கள் அதிக பலமில்லாத வீடுகளில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில்,பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) என்ற திட்டத்தின்கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் முதல் தவணையை திரிபுராவின் 1.47 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 1 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் வழங்குகிறார்.
அதன்படி,இந்த விழாவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் என மொத்த மதிப்பில் சுமார் ரூ.700 கோடி நிதி நேரடியாக வரவு வைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்,இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“இன்று மதியம் 1 மணிக்கு, திரிபுராவின் 1.47 லட்சம் பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY-G) முதல் தவணை வழங்கப்படும். இது மாநில மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பெரும் உத்வேகத்தை அளிக்கும்”,என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம்,திரிபுராவில் உள்ள “கச்சா” வீடு என்ற முறை (மூங்கில், களிமண், புல், ஆளி, கூழாங்கற்கள், தழைக்கூளம், பயிர் எச்சங்கள் மற்றும் பலவற்றால் கட்டப்பட்ட கட்டமைப்புகளைக் கொண்டவை) மாற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. திரிபுராவின் புவி-காலநிலை நிலை பிரதமரின் நேரடித் தலையீட்டைத் தொடர்ந்து இது மேற்கொள்ளப்பட்டது, மேலும் இது மாநிலத்தில் “கச்சா” வீடுகளில் வசிக்கும் ஏராளமான பயனாளிகளுக்கு “புக்கா” வீடு (மரம், செங்கற்களால் செய்யப்பட்ட வலுவான கட்டமைப்புகளைக் கொண்ட)வீடு கட்டுவதற்கான உதவியைப் பெற இத்திட்டம் உதவியது.
குறிப்பாக,2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் “அனைவருக்கும் வீடு” என்ற வீட்டுவசதி இலக்கை அடைவதை இலக்காகக் கொண்ட பிரதமர் மோடி அரசாங்கத்தின் லட்சிய நோக்கமாக இந்தத் திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…