இந்தியா

M வரிசையில் பிரதமர் பயன்படுத்தாத ‘அந்த’ வார்த்தை.! மஹுவா மொய்த்ரா ஆவேசம்…

டெல்லி: பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது M வரிசையில் மணிப்பூர் என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தவில்லை என மக்களவையில் TMC எம்பி மஹுவா மொய்த்ரா விமர்சித்துள்ளார்.

இன்று மக்களவை கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். அப்போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா ஆளும் பாஜக அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் பேசுகையில்,  கடந்த முறை என்ன யாரும் பேச அனுமதிக்கவில்லை. என்னை அடக்க நினைத்தார்கள். அதனால் தான் அவர்கள் 63 எம்.பிக்களை இழந்தனர். பாஜகவினரை மக்கள் முடக்கிவிட்டனர். கடந்த முறை 303 என்று இருந்த பாஜக எம்பிக்கள் தற்போது 240ஆக குறைந்துவிட்டனர்.

கடந்த வருடத்தில் என்னை பார்த்து பலர் நீங்கள் நிறைய இழந்துவிட்டீர்கள் என்று கூறினார்கள். ஆமாம் நான் எனது பதவியை இழந்தேன். என் வீட்டை இழந்தேன். அறுவை சிகிச்சையின் போது எனது கர்ப்பப்பையை இழந்தேன். ஆனால் ராகுல் காந்தி கூறியது போல நான் என்னுடைய பயத்தை இழந்து விடுதலையை பெற்றுவிட்டேன். வரலாற்றில் இல்லாத அளவுக்கு குடியரசு தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார். இது என்ன மன்னராட்சியா.? ஜனநாயக நாட்டில் செங்கோல் எதற்கு .? என கடுமையாக உரையாற்றினார் மஹுவா மொய்த்ரா.

மேலும் பேசிய மொய்த்ரா பிரதமரையும் விமர்சனம் செய்து இருந்தார். பிரதமர் பற்றி அவர் குறிப்பிடுகையில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது Musalman , Mulla, Madrasa, Mutton ஆகிய எல்லா M வரிசை சொற்களையும் பயன்படுத்தினார் ஆனால் அவர் பயன்படுத்தாத M வரிசை சொல் மணிப்பூர் (Manipur) மட்டுமே என்று விமர்சனம் செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா.

Recent Posts

கூகுள் மேப்புக்கு இனி ஆப்பு தான் ..! புவனை வைத்து கலக்கும் இஸ்ரோ!

ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை…

9 hours ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்திய அணியை அறிவித்தது தடகள சங்கம் ..!

ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்…

9 hours ago

பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!

பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…

10 hours ago

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

14 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

15 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

15 hours ago