நாட்டில் கொரோனா நிலைமை மற்றும் தடுப்பூசி குறித்த உயர்மட்ட ஆய்வு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
பிரதமர் அலுவலகத்தின் கூற்றுப்படி, தொற்றுநோய் மற்றும் தடுப்பூசி இயக்கம் தொடர்பான இந்தியாவின் தற்போதைய நிலைமையை சரி செய்ய இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதிலிருந்து 37,681 பேர் மீண்டுள்ளனர். ஒரே நாளில் 260 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில், கேரளாவில் 26,200 புதிய வழக்குகளும் 114 இறப்புகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியின் மூலமாக இதுவரை 72.37 கோடி தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு இன்றுவரை செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசி குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…
Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்…
Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…