உங்க வீட்டில் இந்த இடத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து பாருங்கள்..!மங்களம் பெருகும்..!

உங்கள் வீட்டில் இந்த பகுதியில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைப்பது மங்களகரத்தை அதிகரிக்கும்.

வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியை இந்த இடத்தில் வைத்தால் வாஸ்து தோஷங்கள் தீரும் வாய்ப்புகள் உள்ளது. அதனை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டில் உள்ள பெரியவர்கள் மிகவும் முக்கியமான மங்களம் அளிக்கும் பொருளாக கருதுகின்றனர். பொதுவாகவே வீட்டில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றும் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று ஐதீகம் உள்ளது.

ஒருவேளை வேற இடத்தில் இருந்தால் வாஸ்து தோஷம் ஏற்பட்டு வீட்டில் அல்லது குடும்பத்தில் பல்வேறு சண்டை, சச்சரவுகள் அதிகரித்து கொண்டே இருக்கும். இவை தீர சரியான இடத்தில் அந்த அந்த பொருட்களை வைத்து கொள்ள வேண்டும். வீட்டில் வைக்கும் கண்ணாடிகளை பலரும் அழகாக பல்வேறு இடங்களில் வைப்பதுண்டு. ஆனால், கண்ணாடி என்பது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு நன்மைகளும் நிறைந்து உள்ளது.

அதனால் அதனை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அங்கு தான் வைக்க வேண்டும். வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்க சரியான இடம் வீட்டின் தென்மேற்கு மூலையாகும். தென்மேற்கு திசையில் உங்கள் வீட்டில் குளியலறை அல்லது கழிப்பறை இருந்தால் அங்கு கிழக்கு திசையில் உள்ள சுவரில் கண்ணாடியை பொருத்த வேண்டும். அதுவும் சதுர வடிவில் அந்த கண்ணடி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் தீரும்.

உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு இடம் பார்ப்பதற்கு ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்தாலோ அல்லது கருமை நிறத்தில் இருந்தாலோ அங்கு உள்ள தோஷம் நீங்க அந்த பகுதியில் பெரியளவில் கண்ணாடியை வைக்கலாம். இது உங்கள் வீட்டில் நன்மை அளிக்கும். அதனை போல வீட்டு வாசலுக்கு எதிரே உயர்ந்த மின்கம்பம், கட்டிடம் அல்லது தேவையற்ற மரங்கள், பார்ப்பதற்கு விசித்திரமான ஏதாவது கூர்மை நிறைந்த முனைப்புகள் போன்றவை இருந்தால் வீட்டில் உள்ள கதவில் பாக்கு கண்ணாடியை மாட்டி வைக்கலாம்.

Recent Posts

IPL2024: மழையால் இன்றைய போட்டி ரத்தானது..!

இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…

9 hours ago

காசுலாம் போச்சு .. ஆர்சிபி-சிஎஸ்கே போட்டியை பார்க்க டிக்கெட் புக் செய்த ரசிகர் ! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !!

சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…

12 hours ago

3 நொடியில் 100 கி.மீ ஸ்பீடு.. அசுர வேகத்தில் களமிறங்கிய BMW M 1000 XR.!

சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…

13 hours ago

பிளாங்க் உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க .!

Plank exersize-பிளாங்க்  உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…

13 hours ago

மற்றவர்களை கவனிப்பது என்னோட வேலை இல்லை! விமர்சனங்கள் குறித்து இளையராஜா!

சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.  இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…

13 hours ago

அத்துமீறிய இலங்கை மீனவர்கள்.. 14 பேரை கைது செய்த இந்திய கடற்படை.!

சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

13 hours ago