எதிர்க்கட்சிகள் அமளி.! மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு.!

கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்ட தொடர் தொடங்கி இன்று 7வது நாளாக தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கி வருகிறது.

இன்றும், மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாகத்திக்கவும், பிரதமர் விளக்கம் அளிக்கவும் எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை அலுவல் பணிகள் நடைபெறாமல் நாள் முழுவதும் ஒத்திவைக்கபடுவதாக அவை தலைவர் ஜன்தீப் கன்கர் அறிவித்துள்ளார். இனி திங்கள் கிழமை காலை 11 மணி மாநிலங்களவை கூட உள்ளது.