Mishra and Doval [file image]
புதுடெல்லி : இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலை 3வது முறையாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பிரதமரின் முதன்மைச் செயலாளராக பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பிரதமர் அலுவலகத்தில் ஆலோசகர்களாக உள்ள அமித் கரே மற்றும் தருண் கபூர் ஆகியோர் அதே பதவியில் மேலும் 2 ஆண்டுகளுக்கு தொடர்வார்கள் என பணியாளர் நலன் அமைச்சகம் (DoPT) அறிவித்துள்ளது. கேபினட் அமைச்சருக்கான Protocol Rank உடன் NSAவாக அஜித் தோவல் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்து.
இவர்களது பதவிக்காலம் பிரதமரின் பதவிக்காலம் வரையிலோ அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையிலோ இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித் தோவல் மற்றும் பி.கே.மிஸ்ராவை மீணடும் அந்தந்த பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டதன் மூலம், வலுவான தேசிய பாதுகாப்பு மற்றும் திறமையான நிர்வாக செயல்பாடுகளை நிலைநிறுத்துவதில் மோடியின் அணுகுமுறையை பிரதிபலிக்க செய்கிறது.
இந்த நியமனம் அறிவிப்பின் மூலம், மீண்டும் அந்த இரு ஓய்வுபெற்ற அதிகாரிகளும் முறையே அதிக காலம் NSA மற்றும் பிரதமரின் முதன்மை ஆலோசகர்களாக பணியாற்றிய அதிகாரிகளாக திகழ்கிறார்கள். பி.கே.மிஸ்ரா பிரதமரின் நிர்வாக விஷயங்களையும் நியமனங்களையும் தொடர்ந்து கையாளும் அதே வேளையில், அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு, இராணுவ விவகாரங்கள் மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைக் கையாளுவார்.
1972-ம் ஆண்டு குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான பி.கே. மிஸ்ரா, இந்திய அரசாங்கத்தின் விவசாயச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் மோடியுடன் இருந்துள்ளார். 1968 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அஜித் தோவல், 2014-ல் NSA ஆக பொறுப்பேற்றார். மிஸ்ரா மற்றும் தோவல் இருவரும் பிரதமர் மோடியின் மிகவும் நம்பகமான உதவியாளர்களாகக் கருதப்படுகிறார்கள். ஏனெனில் இருவரும் 2014-ல் பிரதமர் ஆவதற்கு முன்பு இருந்தே அவருடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…
Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ தான் .இந்த பால் மற்றும்…
சுரேஷ் ரெய்னா : இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…
உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…
குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…
இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான…