ஓபிஎஸ், ஈபிஎஸ் கடிதங்களை இன்னும் படிக்கவில்லை – சபாநாயகர் அப்பாவு

ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய கடிதங்களை இன்னும் படிக்கவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில், ஏற்கனவே ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், நேற்றும் இருவரும் மீண்டும் கடிதம் எழுதி இருந்தனர்.

நேற்று காலை ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு  கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, நேற்று மாலை ஈபிஎஸ் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.  அதில், அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற அடிப்படையில் அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு, ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய கடிதங்களை இன்னும் படிக்கவில்லை. கடிதத்தை படித்த பின், இந்த பிரச்சனையில் நியாயமான முடிவு எடுக்கப்படும் என விளக்கமளித்துள்ளார்.

Leave a Comment