எத்தனை தடைகள் வந்தாலும் நவம்பர் 17 முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடரும் என பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது.
இதனையடுத்து பாஜக சார்பில் தடையை மீறி திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி வேலயாத்திரையும் நடந்தது. வேல் யாத்திரை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில் சென்னை – தியாகராயா பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், தமிழகத்தில் எத்தனை தடைகள் வந்தாலும் நவம்பர் 17 முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடரூம் எனவும் திட்டமிட்டபடி டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என்றும், இதில் மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என கூறிய அவர், கோவிலுக்கு யாத்திரையாக செல்வது மதம் சார்ந்த நிகழ்ச்சியா? என கேள்வியெழுப்பிய எல்.முருகன், சாலையில் செல்பவர்களையெல்லாம் கைது செய்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கையா? எனவும் கேள்வியெழுப்பினார்.
அதுமட்டுமின்றி, முதல்வர் பழனிசாமி செல்லும் இடங்களில் கூட அதிகளவில் கூட்டம் கூடுகிறதாக குற்றம்சாட்டிய அவர், நாங்கள் கூடினால் வழக்கு, கைது நடவடிக்கை பாய்கிறது என தெரிவித்துள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…