6 மணி நேரத்திற்கு நின்று தாக்கும் நிவர்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இன்று இரவு நிவர் புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், கரையை கடந்தபின் அதன் தாக்கம் 6 மணி நேரம் வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு தென் கிழக்கே சுமார் 190 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தென் கிழக்கே சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த இவர் புயல் நிலை கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு புதுவை அருகே கரையைக் கடக்க கூடும். கரையை கடக்கும்போது மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் கரையை கடந்த பின், கடலோர மாவட்டங்களில் 6 மணி நேரங்களில் புயலின் தாக்கம் இருக்கக்கூடும் என எச்சரித்த வானிலை ஆய்வு மையம், அதன் பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் என தெரிவித்துள்ளது. புயலின் கண் பகுதி வரும்போது அதிகளவில் பாதிப்பு இருக்காது. ஆனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நாளை மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக குடிசை வீடுகள் விளம்பரப் பலகைகள், மின்சார கம்பங்கள், விளம்பரப் பதாகைகள் மற்றும் தொலைத் தொடர்புகள் பாதிக்கப்பட அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. தாழ்வான பகுதிகளில் வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்தப் புயல் கரையை கடந்த பின் ராணிப்பேட்டை திருவண்ணாமலை வேலூர் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், சமயங்களில் 85 கிலோமீட்டர் வரையிலும் காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

Recent Posts

2 அரை மணி நேரம் என் மூஞ்ச யாரு பாப்பாங்க? டென்ஷனான எம்.ஜி.ஆர்!

M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எம் ஜி…

4 mins ago

நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறுதேர்தல்.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு…

7 mins ago

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி ?

Watermelon milk shake-  தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை…

21 mins ago

பாரம்பரியமிக்க பானக்கத்தின் ஆச்சரியமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.!

பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான்  நம் ஊர்களில் திருவிழாக்கள்,…

1 hour ago

‘ஹாய் காய்ஸ் நான் உங்கள் தோனி’ .. தோனி பெயரில் மோசடி செய்ய முயற்சி!

Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X  தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…

2 hours ago

இந்த அடி பத்தாது கண்ணா! ரஜத் படிதாருக்கு அட்வைஸ் செய்த அஜய் ஜடேஜா!

Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார்  ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…

2 hours ago