நிவர் புயல்: பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு இழப்பீடு வழங்கபடும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

நிவர் புயலால் 36 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்துகொண்டே புயலாக உருமாறியது. அதனைதொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்துகொண்டே வந்து, தீவிர புயலாக மாறியது. இதனையடுத்து நேற்று மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் புதுச்சேரி இடையே புதுச்சேரியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனையடுத்து அதி … Read more

முழுமையாக கரையை கடந்த புயல்.. வட தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதிதீவிர புயலாக கரையை கடந்து அதன்பின் தீவிர புயலாக வலுவிழந்து, புதுச்சேரியில் இரவு 2.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது.   வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று, புதுச்சேரி அருகே நேற்று இரவு 11:30 முதல் இன்று நள்ளிரவு 2:30 மணிக்கு இடையில் கரையை கடந்தது. அதன்பின் தீவிர புயலாக வலுவிழந்து, புதுச்சேரி அருகே முழுமையாக கரையை கடந்து, வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்தது. மேலும் 6 … Read more

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே திடீரென ஏற்பட்ட 20 அடி பள்ளம்!

நிவர் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதீ தீவீரப்புயலாக வலுப்பெற்று, தற்பொழுது புதுச்சேரியை நெருங்குகிறது. புயல் கடக்க தொடங்கிய இடத்தில், 120 கி.மீ முதல் 140 கி.மீ வரை பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிவர் புயலின் எதிரொலியாக கடலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாட்டங்களில் பயங்கர … Read more

#BREAKING: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

புதுச்சேரி வடக்கே 16 கி.மீ வேகத்தில் மையப்பகுதியை கடந்து வரும் நிவர் புயலால் 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நிவர் புயலால் அடுத்த 3 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சை, திண்டுக்கல், … Read more

சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை.! கரையை கடக்கும் மையப்பகுதி.!

நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடந்து வரும் நிலையில், சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மெரினா கடற்கரை, சாந்தோம், அடையார், பட்டினப்பாக்கம் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், வடபழனி, ஆதம்பாக்கம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்து வருகிறது. புதுச்சேரி வடக்கே நிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடந்து வருகிறது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் நிவர் புயல் கரையை கடந்து வருகிறது. … Read more

Nivar strom: கடலூரில் வெளுத்து வாங்கும் கனமழை.. அதிகபட்சமாக 24.2 செ.மீ மழை பதிவு!

கடலூரில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், 1 மணிநேரத்தில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதீ தீவீரப்புயலாக வலுப்பெற்று, தற்பொழுது 16 கி.மீ வேகத்தில் புதுச்சேரிக்கு அருகே கரையை கடந்து வருகிறது. புயல் கடக்க தொடங்கிய இடத்தில், 120 கி.மீ முதல் 140 கி.மீ வரை பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிவர் புயலின் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்று, இடி, … Read more

கரையை கடக்கத் தொடங்கிய நிவர் புயல்.. முழுமையாக கரையை கடக்க 3 மணிவரை ஆகும்!

15 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கத் தொடங்கிய நிவர் புயல், முழுமையாக கரையை கடக்க அதிகாலை 3 மணிக்கு மேல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதீ தீவீரப்புயலாக வலுப்பெற்று, தற்பொழுது 15 கிமீ வேகத்தில் சென்னையில் இருந்து 115 கிலோ மீட்டர் தூரத்தில் புதுச்சேரி அருகே கரையை கடந்து வருகிறது. புயல் கடக்க தொடங்கிய இடத்தில், 120 கிமீ முதல் 140 கிமீ வரை பலத்த காற்று வீசி வருகிறது. … Read more

செம்பரம்பாக்கம் ஏரி.. நீர்திறப்பு 7000 கன அடியாக அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 3000 கன அடியாக இருந்த நிலையில், தற்பொழுது 7,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல், தற்போது அதிதீவிர புயலாக உருமாறி, மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் அருகே புதுச்சேரியில் கரையை கடக்க உள்ளது. இந்த புயல் தற்பொழுது 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், கடலூரில் இருந்து கிழக்கு- தென் கிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கு- தென் … Read more

சென்னை மக்களே.. வீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்தால் உடனே இந்த எண்களுக்கு போன் செய்யுங்கள்!

சென்னையில் வீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்தால், 044-22200335, 9566184292 ஆகிய எண்கள் மூலம் வனத்துறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல், தற்போது அதிதீவிர புயலாக உருமாறி, மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் வீடுகளின் … Read more

6 மணி நேரத்திற்கு நின்று தாக்கும் நிவர்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இன்று இரவு நிவர் புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், கரையை கடந்தபின் அதன் தாக்கம் 6 மணி நேரம் வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு தென் கிழக்கே சுமார் 190 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தென் கிழக்கே சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த இவர் புயல் நிலை கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து அதி தீவிர புயலாக … Read more