புனேவில் புதிதாக டிரைவ்-இன் தடுப்பூசி மையம் ஆரம்பம்..!

புனேவில் கடந்த திங்கள் கிழமையன்று, முதல் முறையாக டிரைவ்-இன் தடுப்பூசி மையத்தை ஹடஸ்பரில் உள்ள ஆடிட்டோரியத்தில் திறந்து வைத்துள்ளனர்.

ஐந்து மாதங்களுக்கு பிறகு மீண்டும் இங்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடங்கியுள்ளது. புனே முனிசிபல் கார்பெரேஷன் தொடங்கியுள்ள டிரைவ்-இன் தடுப்பூசி மையத்தில் முதல் நாளில் 64 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கும் முன்னுரிமை அளிக்கும் மையங்களில் இதுவே இந்நகரத்தின் முதல் தடுப்பூசி மையமாகும்.

இதை திறந்து வைத்த தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேதன் டூப் கூறுகையில், இந்த ஆடிட்டோரியம் பெருந்தொற்று காலத்தில் விரைவில் திறக்கப்படாத நிலையில் இருக்கும் மிகபெரிய பார்க்கிங் வசதி கொண்ட ஆடிட்டோரியம். நாங்கள் மிகப்பெரிய பார்க்கிங் வசதி கொண்ட இடத்தில் இந்த தடுப்பூசி மையத்தை அமைக்க நினைத்ததால் இவ்விடத்தை தேர்வு செய்தோம். இங்கு தடுப்பூசி போடுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் அரசு வழிகாட்டுதலின் படி, பதிவு செய்தும் நேரடியாக வந்தும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

தங்களின் ஆவண சரிப்பார்ப்பு முடிந்தவுடன் 3 நிமிடத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும். மேலும், தடுப்பூசி செலுத்தியவுடன் 30 நிமிடங்கள் கண்காணிப்பு பகுதியில் இருந்து வெளியேறும் வகையில் நெரிசல் இல்லாத பார்க்கிங் வசதி இவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் வருவதற்கும் போவதற்கும் என்று தனித்தனி வழிகள் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

முதல் நாளில் இந்த தடுப்பூசி மையத்தில் 64 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 4 பேர் மாற்றுத்திறனாளிகள், ஒருவர் மனநலம் சரியில்லாதவர் மற்றும் 4 மூத்த குடிமக்கள் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தற்போது அரசு தடுப்பூசி மையங்களில் 45 வயதிற்கு அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், இங்கு தடுப்பூசியின் சிறப்பு தேவைகள் இருப்பவர்களுக்கு தடுப்பூசி வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அங்குள்ள அதிகாரி தெரிவித்துள்ளார்.

Recent Posts

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

22 mins ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

41 mins ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

1 hour ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

2 hours ago

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…

3 hours ago

ஹைதராபாத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

9 hours ago