கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நேரு விலங்கியல் பூங்கா சிங்கங்கள் குணமடைந்துள்ளது!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள எட்டு சிங்கங்கள் தற்போது குணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. மனிதர்களுக்கு தான் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பி வந்த நிலையில், தற்பொழுது விலங்குகளுக்கும்கொரோனாவின் தாக்கம் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா முதல் அலையிலேயே நியூயார்க் விலங்கியல் பூங்காவில் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு தொற்று ஏற்பட்ட சம்பவம் தெரியவந்தது. தற்பொழுது கொரோனா இரண்டாம் அலையில் வன விலங்குகள் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கும் காய்ச்சல் போன்ற கொரோனாவிற்கான அறிகுறிகள் ஏற்பட்டது.

எனவே அந்த சிங்கங்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் நான்கு ஆண் மற்றும் நான்கு பெண் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது உறுதியானது. இதனையடுத்து இந்த 8 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், 14 நாட்கள் கடந்த பின்பு மீண்டும் பரிசோதனை செய்ததில் தற்பொழுது இந்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Rebekal

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

3 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

4 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

11 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

16 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

16 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

16 hours ago