நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவரம்! கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் கண்டுபிடிப்பு!

கடைசியாக நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா எனும் மாணவர். இதன் பேரில் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையும் மருத்துவருமான வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது சிபிசிஐடியினர் அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில் மருத்துவர் வெங்கடேசனை சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

மருத்துவர் வெங்கடேசன் என்பவர் கேரளாவைச் சேர்ந்த ரஷீத் என்ற இடைத்தரகர் மூலம் இருபது லட்ச ரூபாய் கொடுத்து தன் மகனுக்கு பதிலாக வேறு ஆளை வைத்து நீட் தேர்வு எழுதி வைத்துள்ளார். கேரளாவை சேர்ந்த ரஷீத் என்பவர் நன்கு படிக்கும் மாணவர்களை கொண்டு அவர்களுக்கு பணம் கொடுத்து நீட் தேர்வு எழுத வைத்து வந்துள்ளார் என்பது தற்போது வெளியாகியுள்ளது.

சென்ற ஆண்டே இம்ரான் எனும் மாணவனுக்கு பதிலாக வேறு ஒரு ஆளை வைத்து நீட் தேர்வு எழுதி தற்போது அந்த மாணவன் முதலாம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டார். இம்ரான் ஏற்கனவே மொரீசியசிஸில் மருத்துவம் படித்து,அதை பாதியில் விட்டு இங்கு வந்தவர். தற்போது விஷயம் தெரிந்ததும் மொரீஷியசிற்கு தப்பிவிட்டதாக தெரிகிறது.

மருத்துவர் வெங்கடேஷின் நண்பரான சரவணன் மூலமாகத்தான், ரஷீத் எனும் இடைத்தரகர் பற்றிய விவரம் வெங்கடேஷிற்கு தெரியவந்துள்ளது. மேலும், மருத்துவர் சரவணன் தனது மகனான பிரவீனையும் இதேபோல ஆள்மாறாட்டம் செய்து மருத்துவம் படிக்க சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அதனால் அவர்கள் இருவரையும் சிபிசிஐடியினர் விசாரிக்க உள்ளனர்.

மேலும், ராகுல், அபிராமி என்பவரும் நீட் தேர்வில் குளறுபடி செய்து மருத்துவம் பயின்று வருவதாக கூறப்படுகிறது. இதுபோக கடந்த வருடம் நீட் தேர்வில் குளறுபடி செய்து தற்போது மொரிசியஸ் தப்பி சென்றதாக கூறப்படும் இம்ரான் எனும் மாணவனின் தம்பியும் இப்படித்தான் மருத்துவம் சேர்ந்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

1 hour ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago