21-ம் நூற்றாண்டின் தேவையை பூர்த்தி செய்வதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி அமல்படுத்தல் குறித்த பார்வையாளர் மாநாட்டில் உரையாற்றிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசிய கல்வி கொள்கை 2020 அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் ஒரு சமமான மற்றும் துடிப்பான அறிவு சமுதாயத்தை வளர்ப்பதற்கான பார்வையை அமைக்கிறது. 21-ம் நூற்றாண்டின் தேவையை பூர்த்தி செய்வதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம். புதிய கல்வி கொள்கை இந்தியாவின் பெருமையை மீட்டெடுக்கும்.
கல்விக் கொள்கையை உருவாக்கிய கஸ்தூரி ரங்கன் குழுவினருக்கு குடியரசு தலைவர் பாராட்டுகளை தெரிவித்து, 2035 ஆம் ஆண்டில் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை (ஜி.இ.ஆர்) 50 சதவீதமாக உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கை 2020 இன் முக்கிய குறிக்கோள் என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இந்த இலக்கை அடைய தொழில்நுட்பம் நாட்டிற்கு உதவ முடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முந்தைய காலங்களில் இந்தியா உலகளவில் மதிக்கப்படும் கல்வி மையமாக இருந்தது. தக்ஷஷிலா மற்றும் நாலந்தாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஒரு முக்கிய வாய்ந்தவையாக இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் உலக தரவரிசையில் இடம்பெறவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை அதிகப்படியான விமர்சன சிந்தனையையும் விசாரணை மனப்பான்மையையும் ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…