மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 27-வது போட்டியில் மும்பை – சென்னை அணிகள் டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சென்னை அணியில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக அம்பதி ராயுடு 72*, டு பிளெசிஸ் 50 , மொயின் அலி 58 ரன்கள் எடுத்தனர். 219 ரன்கள் இலக்குடன் மும்பை அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி கோக் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நிதானமாக விளையாடி வந்த ரோகித் சர்மா 35 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி கோக் 38 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த பொல்லார்ட், க்ருனால் பாண்டியா இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் கூட்டணியில் 90 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடி வந்த பொல்லார்ட் 16 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். கடைசிவரை களத்தில் பொல்லார்ட் 87* ரன்களுடன் நின்றனர். சென்னை, மும்பை தலா 7 போட்டிகளில் விளையாடி சென்னையில் 5 வெற்றிகளையும், 2 தோல்வி தழுவியுள்ளது . மும்பை 4 வெற்றிகளையும், 3 தோல்வியை தழுவியுள்ளது.
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…