புதிய சாதனை படைத்த மகேந்திர சிங் தோனி

M.S.Dhoni: டி20 போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்த தோனி.

விசாகப்பட்டினம் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது. டெல்லி அணி விளையாடிய போது , ரவீந்திர ஜடேஜா பந்து வீசிய 10.4 ஆவது ஓவரின் போது பிரித்வி ஷா கொடுத்த கேட்சை தோனி பிடித்த போது புதிய சாதனை படைத்தார்.

அதன்படி டி20 கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் கீப்பராக 300 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார் தோனி. இந்த சாதனையை இதற்கு முன்னர் எந்தவொரு வீரரும் செய்ததில்லை. தோனிக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் (274), இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (274), தென் ஆப்பிரிக்காவின் குயீண்ட டி காக் (270) ஆகியோர் உள்ளனர்.